1. Home
  2. தமிழ்நாடு

இன்று தை அமாவாசை : இன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும்..!

1

இந்துக்களின் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று தை அமாவாசை. இது நம்முடைய பாவங்களை மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களின் பாவங்களையும் போக்குவதற்கான மிகச் சிறந்த நாளாகும். இந்த நாளில் புனித நீராடுவது, விரதம் இருப்பது, தானம் அளிப்பது, பித்ரு தர்ப்பணம் செய்வது ஆகியன பல மடங்கு அதிகமான புண்ணிய பலன்களை தரும். பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருப்பவர்கள், பித்ருக்களின் ஆசியை பெற வேண்டும் என நினைப்பவர்கள் தவறாமல் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும்.

தை மாதத்தின் அனைத்து நாட்களும் புனித நீராட சிறப்பான நாள் என்றாலும், தை அமாவாசை அன்று புனித நதிகள், கடலில் நீராடினால் முந்தைய அனைத்து பிறவிகளிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல மற்ற அமாவாசைகளில் விரதம் இருந்தால் பித்ருதோஷம் மட்டுமே நீங்கும். ஆனால் தை அமாவாசையில் விரதம் இருந்தால் பித்ருதோஷத்துடன், சனியால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசை இந்த ஆண்டு பிப்ரவரி 09ம் தேதி வருவதாக காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் நாம் செய்யும் தானங்களையும், தர்ப்பணம் போன்ற வழிபாடுகளையும் நம்முடைய முன்னோர்களே நேரடியாக வந்து ஏற்பதாக ஐதீகம். தை அமாவாசை, நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்லும் நாள் என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடும், தான தர்மங்களும் மற்ற நாட்களில் செய்வதை விட பல மடங்கு அதிக பலனை தரும். 

Trending News

Latest News

You May Like