1. Home
  2. தமிழ்நாடு

இன்று சித்திரை அமாவாசை : குடும்பம் தழைக்க இன்று இதை செய்ய மறக்காதீங்க...

1

அமாவாசை என்றால் அது முன்னோரின் வழிபாட்டிற்கு உகந்த நாள் அந்த நாளில் நம் வீட்டு முன்னோர்களை வணங்கும் பொழுது நம்முடைய குடும்பம் தலை துவங்கும் என்பது காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அந்த வகையில் இன்று வரக் கூடிய அமாவாசை இன்னும் அதிசக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அது வரக்கூடிய மாதம். சித்திரை மாதம் என்றாலே அதுவும் நமக்கு ஒரு முக்கியமான மாதங்களில் ஒன்று ஏனெனில் சூரிய பகவான் சித்திரை மாதத்தில் தான் தன்னுடைய பயணத்தை ஒவ்வொரு ராசியிலும் துவங்குவார். ஆகையால் தான் பல புகழ் பெற்ற ஆலயங்களில் திருவிழாக்கள் பூஜைகள் போன்றவை இந்த சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. அப்படியான இந்த மாதத்தில் வரக் கூடிய பௌர்ணமியும் மிகவும் விசேஷம். 

இந்த நாளில் நம்முடைய குடும்பத்தின் செல்வ நலனை பெருக்கிக் கொள்ளவும் முன்னோர்களின் ஆசியும் குலதெய்வத்தின் அருளையும் பெற சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம் என்று சொல்லப்படுகிறது.  

குடும்பம் தழைக்க சித்திரை அமாவாசையில் செய்ய வேண்டியது :

இன்று காகத்திற்கு சாதம் வைக்காமல் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் காகம் ஆனது நம் முன்னோர்களாகவும் சனி கிரகத்தின் வாகனமாகவும் கருதப்படுவதால் இன்றைய தினம் இதை செய்வது உத்தமம். அத்துடன் இன்றைய தினத்தில் அசைவத்தை தவிர்ப்பதும் மிகவும் நல்லது. இதைத் தவிர்த்து இன்றைய தினத்தில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வ ஆலயம் செல்ல முடிபவர்கள் அங்கு சென்று செய்தால் நல்லது. முடியாதவர்கள் வீட்டிலேனும் குலதெய்வத்தை நினைத்து எளிமையான ஒரு வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். இது உங்கள் குலதெய்வத்தின் அருளை முழுவதுமாக பெற்று தரும். 

அதே போல் இன்றைய தினத்தில் நவகிரகங்களை வழிபடுவதும் சிறந்தது. சித்திரை அமாவாசை தினத்தில் நவகிரக வழிபாடு நம்முடைய தோஷங்கள் துன்பங்கள் போன்றவற்றை நீக்க வழி தேடி தரும். இவை அனைத்துடன் சேர்த்து இன்றைய தினத்தில் யாரேனும் ஒருவருக்காவது உணவு வாங்கி கொடுங்கள். அது உங்கள் குடும்பம் என்றென்றைக்கும் தழைக்க உதவும். அதுவும் உடல் ஊனமுற்றோருக்கு செய்யும் தானமானது சனி கிரகத்தின் அருளையும் சேர்த்து பெற்றுத் தரும். 

இன்றைய இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் இந்த எளிய வழிபாடுகளையும் தான தர்மங்களையும் செய்து என்றென்றைக்கும் செல்வ செழிப்பாக நிம்மதியாக வாழக்கூடிய ஒரு வாழ்க்கையை நீங்கள் பெறலாம்.

சித்திரை அமாவாசை அன்று செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள்:

1. அமாவாசை நாட்களில், அரச மரத்திற்கு கங்கை நீர், பூக்கள் சமர்ப்பித்து வழிபடலாம். உங்கள் முன்னோர்களை நினைத்து 'ஓம் பித்ருப்ய: நமஹ' என்று சொல்லுங்கள். பித்ரு சூக்தத்தையும் சொல்லலாம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அவர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

2. ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, சங்கராந்தி நாட்களில் சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பிக்கவும். சிவப்பு,சந்தனம், கங்கை நீர், சுத்தமான நீர் ஆகியவற்றை செம்பு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். 'ஓம் பித்ருப்ய: நமஹ' என்று சொல்லுங்கள். இதனால் நல்ல அதிர்ஷ்டம், செல்வம் கிடைக்கும். வைசாக அமாவாசையில் இந்த பரிகாரங்களைச் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷத்தின் விளைவுகளையும் குறைக்கலாம்.

3. அமாவாசை நாட்களில், தெற்கு திசை நோக்கி உங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள். பித்ரு ஸ்தோத்திரம் அல்லது பித்ரு சூக்தம் சொல்லி அவர்களின் ஆசியை வேண்டுங்கள். இதனால் உங்கள் முன்னோர்களை மதிப்பதுடன், உங்கள் குடும்பத்திற்கு அமைதி, செழிப்பும் கிடைக்கும். ஆன்மீக தொடர்பும் அதிகரிக்கும்.

4. சில குறிப்பிட்ட நாட்களில் சில மந்திரங்களைச் சொல்லுங்கள். திரயோதசி அன்று நீலகண்ட ஸ்தோத்திரம், பஞ்சமி அன்று சர்ப்ப சூக்தம், பௌர்ணமி அன்று ஸ்ரீ நாராயண கவசம் சொல்லுங்கள். உங்கள் வசதிக்கு ஏற்ப பிராமணர்களுக்கு உணவு, இனிப்பு, தட்சணை கொடுங்கள். இதனால் ஆன்மீக வளர்ச்சி ஏற்படும். உங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.

5. அமாவாசை நாட்களில், உங்கள் முன்னோர்களின் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வையுங்கள். அரச மரத்தின் அடியில் அல்லது கிழக்கு திசையில் விளக்கு வைக்கலாம். உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆசியை வேண்டுங்கள். இதனால் செல்வம், பணம், செழிப்பு அதிகரிக்கும். ஆன்மீக வளர்ச்சியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.

Trending News

Latest News

You May Like