1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆனி பெளர்ணமி : இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி இப்படி வழிபட்டால் கேட்ட வரங்கள் நிச்சயம் கிடைக்கும்..!

1

ஒவ்வொரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி மிகவும் முக்கியமான வழிபாட்டு நாளாகும். இருந்தாலும் கார்த்திகை, தை, சித்திரை உள்ளிட்ட சில மாதங்களில் வரும் பெளர்ணமியை மட்டும் தான் நாம் முக்கியமானதாக கருதி வழிபடுகிறோம். அந்த வரிசையில் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமியும் மிகவும் முக்கியமானதாகும். ஆனி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் கடைசி மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் பெளர்ணமியும் தட்சிணாயன காலத்தில் வரும் கடைசி பெளர்ணமி என்பதால் சிவ பெருமான், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகியோரை வழிபட மிகவும் சிறப்பானதாகும்.

பெளர்ணமியில் குலதெய்வத்தை வழிபடுவதும், சந்திரனை வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆண்டு ஆனி மாத பெளர்ணமி ஜூன் மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 07.45 மணி துவங்கி, ஜூன் 22ம் தேதி காலை 07.19 வரை பெளர்ணமி திதி உள்ளது. நாள் முழுவதும் பெளர்ணமி திதி உள்ளதால் இந்த நாளில் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. 

மாலை 6 மணிக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபடுவதால் நாம் கேட்ட வரங்கள் எதுவாக இருந்தாலும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமையில் வரும் பெளர்ணமி எப்போதும் சிறப்பானதாகும். வெள்ளிக்கிழமை, சுக்கிரனுக்குரிய நாளாகும். சுக்கிரனுக்குரிய தானியம், வெள்ளை மொச்சை. அதே போல் பெளர்ணமி என்பது சந்திரனுக்குரிய நாளாகும். சந்திரனுக்குரிய நிறமும், சுக்கிரனுக்குரிய நிறமும் வெள்ளையாகும். அதனால் வெள்ளை நிற சர்க்கரையை கைபிடி அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனி பெளளர்ணமி அன்று மாலை 6 மணிக்கு பிறகு ஒரு தட்டில் ஒரு புறம் வெள்ளை மொச்சையையும், மற்றொரு புறம் வெள்ளை சர்க்கரையையும் பரப்பி வைக்க வேண்டும். இவற்றிற்கு இடையே அகல் விளக்கில் நெய் விட்டு, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். பிறகு இந்த விளக்கை எடுத்து கொண்டு வீட்டு வாசல் அல்லது மொட்டை மாடிக்கு சென்று அங்கு தெரியும் சந்திரனுக்கு காட்டி, "ஓம் சந்திர மெளலீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும். பிறகு அந்த விளக்கை மீண்டும் பூஜை அறைக்கு எடுத்து வந்து வைத்து, அது தானாக குளிரும் வரை எரிய விட வேண்டும். அடுத்த நாள் வெள்ளை சர்க்கரை மற்றும் வெள்ளை மொட்சையை கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும்.

இந்த வழிபாட்டினை மேற்கொள்ளும் போது சிவ பெருமானையும், மகாலட்சுமியையும், சந்திரனையும் மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி விளக்கேற்றி வழிபடுவதால் சிவ பெருமானின் அருளும், மகாலட்சுமி, சுக்கிர பகவான் மற்றும் சந்திரனின் அருளும் கிடைக்கும். 

Trending News

Latest News

You May Like