இன்று டெல்லி பயணம்... நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a26b6d4b49e4565fded327bfae8ca123.webp?width=836&height=470&resizemode=4)
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுக்கான அழைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் மோடியை நாளை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருக்கிறார். அதேபோல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரையும், உதயநிதி ஸ்டாலின் சந்தித்து அழைப்பிதழ் வழங்க உள்ளார். போட்டியின் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் கேலோ இந்தியா போட்டி கடந்த 2018ம் ஆண்டு இந்த போட்டிகள் தொடங்கப்பட்டது. கொரேனாா காரணமாக 2020ல் போட்டி நடத்தப்படவில்லை. 2021ல் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் போட்டி நடந்தது. 2022ம் ஆண்டுக்கான போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், கட்கா, மல்லர்கம்பம், தங்-டா, ஜூடோ, யோகாசனம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.