1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் 33 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!

1

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 20-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 27-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 32 இடங்கள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் இறங்குகிறார்கள். 

இவர்கள் அனைவரும்  இன்று  ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். இன்று மதியம் 12 மணி முதல் 1 மணிவரை புதன் ஓரையாகும்.அந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். 

இன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு வேட்பு மனுக்களில் கையெழுத்து போடவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. 

Trending News

Latest News

You May Like