1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது..!

1

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின் படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகள் செல்லும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே விரைவுப்பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.இ.டி.சி. ஆம்னி பேருந்துகள் ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் டி.என்.எஸ்.டி.சி.-ம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like