1. Home
  2. தமிழ்நாடு

சிறுத்தையை விரட்ட படியேறும் பக்தர்களுக்கு கைத்தடி..!!

tirupati
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் படியேறும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடியை கொடுத்து அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் படியேறிச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மீது வன விலங்குகள் தாக்குதல் நடத்துவது சமீப காலத்தில் தொடர்கதையாகியுள்ளது. 

கடந்த 11-ம் தேதி குடும்பத்தினருடன் மலையேறிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி லக்‌ஷிதாவை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மலையேறும் பக்தர்களின் வசதிக்காக அவர்களுடைய கையில் 5 அடி உயர தடியைக் கொடுத்து அனுப்பும் திட்டத்தை தேவஸ்தானம் துவங்கியுள்ளது. மேலும் பக்தர்கள் கும்பல் கும்பலாக அனுபப்படுகின்றனர். அவர்களுடன் ஆயுதம் ஏந்திய காவலர்களும் உடனிருப்பார்கள். 

அத்துடன் காலை 5 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே 15 வயதுக்குட்பட்டவர்கள் மலையேற முடியும். காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பைக்குகளில் திருப்பதி மலையில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Trending News

Latest News

You May Like