டிக் டிக் நிமிடங்கள்..! பிரபல குத்துச்சண்டை வீரர் களத்திலேயே மயங்கி உயிரிழப்பு..!

கானா நாட்டில் தலைநகர் அக்ரா நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார். இந்த மோதலின் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக தாக்கிக்கொண்டு இருந்த போது, நைஜீரிய வீரர் கேப்ரியல் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் கேப்ரியலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குத்துச்சண்டை போட்டியில் மயங்கிய வீரர் களத்திலேயே உயிரிழந்த நிகழ்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் குறித்து விளையாட்டு துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.