1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்களின் சிறு கவனக்குறைவால் 3 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி..!

1

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் கடந்த மே 15 திருமண நிகழ்வுக்காக பிரதீப் நாகர் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் காரில் சென்று இருக்கிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தின் வாயிலில் மனைவியும் மூத்த மகளும் இறங்கி மண்டபத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். 

பிறகு வாகனத்தை பார்க் செய்து காரை பூட்டிவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்திருக்கிறார் தந்தை.தனது 3 வயது குழந்தை மனைவி எடுத்து சென்றிருப்பார் என நினைத்து காரை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

வெவ்வேறு இடத்தில் இறங்கியதால் கணவனும் மனைவியும் தனித்தனியாக உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவி சந்தித்தபோதுதான் இரண்டாவது குழந்தை இருவருடனுமே இல்லை என்பது தெரிய வந்தது.

பதற்றமான பெற்றோர்கள் உடனடியாக மண்டபம் முழுவதும் தேடி சென்று இருக்கிறார்கள் ஆனால் மண்டபத்தில் இரண்டாவது குழந்தையை காண முடியவில்லை. அதன் பிறகு காரில் சென்று பார்க்கலாம் என நினைத்து வெளியே வந்து தேடினார்கள் நாகர் தம்பதி.

அதன்பிறகு மூடப்பட்ட காருக்குள் குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட தம்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

பெற்றோரின் கவனக்குறைவால் மூன்று வயது குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொடூரமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

Trending News

Latest News

You May Like