1. Home
  2. தமிழ்நாடு

வரும் 11ம் தேதி கிரகப்பிரவேசம் : சீட்டுக்கட்டு போல் சரிந்த 3 மாடி வீடு..!

1

புதுச்சேரியில் புதிதாக கட்டிய 3 மாடி வீட்டிற்கு வரும் பிப்.11ம் தேதி புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் வீட்டின் பின்பகுதியியில் உள்ள உப்பனாரு கழிவுநீர் வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டபோது வீட்டில் விரிசல் விழுந்துள்ளது. 

இத்தகவல் அறிந்து தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அப்பகுதி மக்கள் கூடி வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து ஒதியன்சாலை போலீஸாரும் அங்கு வந்தனர். வாய்க்காலுக்கு அதிகப்படியான மணல் தோண்டுவதால் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது. 

இதனையடுத்து எதிர்பாராதவிதமாக 3 மாடி வீடு சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like