தர்மபுரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் பலி..!

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்ன முறுக்கம்பட்டியில் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டாசு தயாரித்து, இருப்பு வைத்திருந்துள்ளனர்.
இன்று மதியம் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர்.
உயிரிழந்த மூன்று தொழிலாளர்களும் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உயிரிழந்தவர்கள் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோர் என தெரியவந்துள்ளது.