1. Home
  2. தமிழ்நாடு

15 வயது சிறுமியை மயங்க வைத்து தொடர்ந்து 48 மணி நேரம் சீரழித்த மூன்று பேர்!

15 வயது சிறுமியை மயங்க வைத்து தொடர்ந்து 48 மணி நேரம் சீரழித்த மூன்று பேர்!


விவசாயம் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பம்ப் செட்டில் 15 சிறுமியை அடைத்துவைத்து மூன்று காம கொடூரர்கள் இரண்டு நாட்கள் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் உள்ள பினாங்வா என்ற கிராமத்தில் 15 வயது சிறுமி தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில், இர்ஷாத் , சாஹிர் ஆகிய மூன்று இளைஞர்கள் அந்த சிறுமிக்கு குடிக்க டீ கொடுத்தனர். அதை வாங்கி குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.

அந்த சிறுமியை அருகே இருந்த பம்ப் செட்டிற்கு தூக்கிச் சென்ற மூன்று பேரும் இரண்டு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நடுவே சிறுமி கண் விழித்தாலும் கூட மீண்டும் மயக்கமடைய செய்து மாறி மாறி சீரழித்துள்ளனர்.

இப்படியாக சுமார் 48 மணிநேரம் அந்த சிறுமியை சீரழித்தனர் அந்த மூன்று காமுகர்கள். அந்த சிறுமி இதுகுறித்து காவல்துறையிடம் தெரிவிப்பேன் என்று கூறியதற்கு, வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் மூன்று இளைஞர்கள்.

 அதற்கெல்லாம் அஞ்சாத அந்தச் சிறுமி மூன்று பேர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த சிறுமியே தங்களை தேடி வந்ததாக மூவரும் காவல்துறையினர் மாற்றி கூறினர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like