1. Home
  2. தமிழ்நாடு

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்..!

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்..!


அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் ரத்தானதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் கடந்த 5-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர். பின்னர் தமிழகம் கொண்டு வந்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அதேவேளை, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 32 பேர் புகார் அளித்துள்ளனர்.

இதில், அரசியல் காரணங்கள் இல்லை எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ராஜேந்திரபாலாஜி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.

மேலும், அவர் மீது நடைபெற்று வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து சுப்ரீம் கோர்ட் அவருக்கு 4 வார காலம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like