1. Home
  2. தமிழ்நாடு

மருதமலை செல்ல திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு..!

Q

கோயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது:-
மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின்படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இத்திருக்கோவிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் இனி வரும் காலங்களில் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மேற்படி நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like