1. Home
  2. தமிழ்நாடு

தொப்பூர் இரட்டைப்பால விபத்து : 4 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி..!

1

முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் புதன்கிழமை(ஜன.24) மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23), ஜெனிபர்(29)ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இந்த விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கிடவும்  அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like