ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - இதுதான் காரணம்..!
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஆற்றின் வழியாக காவிரி நீர் பாய்கிறது. இதனைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு செல்கிறது. இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இந்த இரண்டு அணைகளிலிருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடைந்தது.
ஆனால் தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 58,670 கனஅடியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 43,000 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அது மாலை 4 மணிக்கு 38,000 கனஅடியாகவும், இரவு 7 மணிக்கு 33,000 கனஅடியாகவும் அதிகரித்து வருகிறது. இருந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி மற்றும் சினி பால்ஸ் ஆகிய அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி கரையோர பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேட்டூர் அணைக்கும் கர்நாடகா அணைகளில் இருந்து வரும் நீரே முக்கிய ஆதாரம். கடந்த ஜூன் 12-ஆம் தேதி வினாடிக்கு 56,000 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அது 35,000 கனஅடியாக குறைந்தது. மாலையில் இது மேலும் குறைந்து 25,000 கனஅடி தண்ணீராக குறைந்தது.
ஆனால் தற்பொழுது அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.தற்போது, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக வினாடிக்கு 28,000 கனஅடியாக உயர்ந்து உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு காரணமாக, அருவி மற்றும் ஆற்று பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.