1. Home
  2. தமிழ்நாடு

இது விவசாயிகளின் எதிர்காலம்..! எப்போதும் போல கண்டும் காணாமல் இருக்காமல் நடவடிக்கை எடுங்க முதல்வரே - எடப்பாடி பழனிச்சாமி..!

1

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பு அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோ மீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

முல்லைப் பெரியாறு, காவிரி - மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like