1. Home
  2. தமிழ்நாடு

இது டெஸ்ட் இல்ல.. 20 - 20 போட்டினு யாராவது கேதர் ஜாதவ்க்கு சொல்லுங்கப்பா.. கடுப்பான ரசிகர்கள் !

இது டெஸ்ட் இல்ல.. 20 - 20 போட்டினு யாராவது கேதர் ஜாதவ்க்கு சொல்லுங்கப்பா.. கடுப்பான ரசிகர்கள் !


ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மோசமான தோல்வியை பதிவு செய்தது. வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்தும் இறுதி கட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

தொடக்கத்தில் வாட்சன், ராயுடு ஆகியோர் அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வாட்சன், ராயுடு, தோனி, சாம் கரன் ஆகியோர் ஆட்டமிழக்க போட்டியின் போக்கு கொல்கத்தா பக்கம் திரும்பியது. அப்போதும் வெற்றிபெற சிஎஸ்கே அணிக்கு தான் அதிக வாய்ப்பு இருந்தது. பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டார் கேதர் ஜாதவ்.

இது டெஸ்ட் இல்ல.. 20 - 20 போட்டினு யாராவது கேதர் ஜாதவ்க்கு சொல்லுங்கப்பா.. கடுப்பான ரசிகர்கள் !அவர் களமிறங்கியதும் பீல்டர்கள் இருக்கும் திசையை எண்ணினார், பேட்களை மாற்றினார்.. இதனால் இன்கைக்கு இருக்குடா சம்பவம் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 20 - 20 போட்டியை டெஸ்ட் இன்னிங்ஸாக மாற்றினார். இறுதியாக முக்கியமான கடைசி நேரத்தில் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து எதிரணிக்கு சாதகமாக அமைந்தார்.

ஜாதவ்வை களமிறக்குவதற்கு பதிலாக பிராவோவை களமிறக்கியிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதிரடியாக ரன் சேர்க்க கூடிய பிராவோவை முன் கூட்டிய களமிறக்கியிருந்தால் சிஎஸ்கேவுக்கு வெற்றி வசமாகும் வாய்ப்பு இருந்திருக்கும். மேலும் ஜாதவ்க்கு எதிராக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர்.


அடுத்து வரும் போட்டியில் சுத்தமாக அவுட் ஆஃப் பார்மில் இரக்கும் கேதர் ஜாதவ்க்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாயப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like