1. Home
  2. தமிழ்நாடு

இது கதை அல்ல நிஜம்... எலியை கைது செய்தது போலீஸ்..!

1

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மது பாட்டில்களை போலீஸ்ஸ்டேஷனில் வைத்திருந்தனர். அவற்றை கோர்ட்டில் சமர்ப்பிப்பதற்காக அறையை திறந்து பார்த்த போது மது பாட்டில்கள் அனைத்தும் காலியாக இருப்பதைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.போலீஸ் ஸ்டேஷனில் உள்ள எலிகள் பாட்டில்களில் துளையிட்டு மதுவைக்குடித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

போலீசார் தரப்பில் தெரிவித்ததாவது, மதுபானங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில்இருநத்தால் எலிகள் அவற்றைக் கடித்து ஓட்டையிட்டு உள்ளே இருந்த சரக்கை காலிசெய்து விட்டன. 60 சிறிய பாட்டில்களில் இப்படி ஓட்டை போட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன் கட்டிடமானது மிகவும் பழமையானது என்பதால் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை வைக்கும் அறையில் எலிகள் தொல்லை அளவுக்கு அதிகமாகவே உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்குகளையும் எலிகள் வி்ட்டு வைக்கவில்லை. அதனால் கஞ்சாவை இரும்பு பெட்டியில் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பொறி வைத்ததில் ஒரு எலி மட்டுமே போலீசாருக்கு சிக்கியது. அதைக்கூண்டில் அடைத்துவைத்துள்ளனர்.

 

Trending News

Latest News

You May Like