1. Home
  2. தமிழ்நாடு

இது நல்லா இருக்கே..! விடைத்தாளில் ”ஜெய்ஸ்ரீராம்” பார்த்ததும் 50 மார்க்கை அள்ளிப் போட்ட ஆசிரியர்கள்!

1

 உ.பி வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில்  சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்வில் குளறுபடி உள்ளதாகவும், ஆசிரியர்கள் பணம் வாங்கிக் கொண்டு பாஸ் போடுவதாகவும்  அப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்தார். தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில், தேர்வெழுதிய மாணவர்கள் சிலரின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன.

அப்போது விடைத்தாள்களில் எழுதியிருந்தவை சரிபார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.  அதில் மாணவர்கள் பக்கத்திற்கு பக்கம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை எழுதியிருந்தனர்.  பல பகுதிகளில் கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி  பெயரையும் எழுதி வைத்திருந்தனர்.  இப்படி எழுதியிருந்த  மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை வழங்கி  பாஸ் செய்துள்ளனர்.

 இந்த விடைத்தாள்களை மீண்டும் திருத்திய ஆசிரியர்கள் முறையாக அதை திருத்தியதில் அவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட 2 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.அத்துடன்  குறுக்கு வழியில் பாஸ் செய்த குறிப்பிட்ட  மாணவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
 


 

Trending News

Latest News

You May Like