1. Home
  2. தமிழ்நாடு

இந்த அரசு வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம் சாராதவர்களுக்கு ஒரு சட்டம் என பாகுபாட்டுடன் செயல்படுகிறது : அண்ணாமலை..!

1

ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தாதது, வாகன நிறுத்த ஏற்பாடுகளை சரிவர செய்யாதது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் கூட்ட நெரிசலில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பொதுமக்களுக்கு இத்தனை சிரமங்களை ஏற்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அதனை கண்காணித்து உறுதி செய்திருக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் இருதரப்பும் தங்கள் கடமைகளில் இருந்து தவறியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தி.மு.க. அரசு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம் எனவும், தங்களை சாராதவர்களுக்கு ஒரு சட்டம் எனவும் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like