1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் இந்த அட்டை இருந்தால் போதும் - அனைத்து உதவியும் கிடைக்கும்!

1

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் என்பது, தமிழ்நாடு அரசால் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும் உருவாக்கப்பட்ட ஒரு நலவாரியமாகும்.

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரை அடையாளம் காண்பது இதன் நோக்கம் ஆகும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக பாதுகாப்பு அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது.இந்த வாரியத்தின் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு கிடைக்கும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைப் பெற்றோரை கொண்ட பெண் பிள்ளைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் மட்டுமின்றி கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட கைம்பெண்களின் மகள்கள் ஆகியோருக்கு திருமண உதவித் திட்டங்கள் மூலம் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் மற்றும் சீர் வரிசை பொருள்கள் வழங்கப்படுகிறது.

கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் ஆகியோரை சேவை இல்லங்களில் பராமரித்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை அளிப்பது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி, மருத்துவ உதவி போன்ற இதர நலத்திட்டங்களையும் வாரியம் வழங்குகிறது.
 

மேலும் கணவரால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையலாம்.வயது 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்பொழுது கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வ தற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையை சேர்ந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு உள்ளது.


 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12-இல் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவி டப்பட்டபெண்கள்,நலிவுற்றபெண் கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன் னிகள் ஆகியோர்களுக்கான நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 8-ஆவது தளத் தில் ஜூன் 12-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்துகொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், கைப்பேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfarebo ard.tn.gov.in எனும் இணையதளத் தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம், அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும், சுயதொழில் திட்டங்களில் மானியத் துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவ தற்கு வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like