அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை:.. செய்யக்கூடாதவை..!

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை:
- யோகா, தியானம், பிராணாயாமம் போன்ற ஆன்மீக செயல்களுடன் நாளைத் தொடங்குங்கள். இது மனதை அமைதிப்படுத்தும். நல்ல சக்தியை கொடுக்கும்.
- விஷ்ணு, லட்சுமி, விநாயகர், குபேரரை வணங்கி பூஜை செய்யுங்கள். விளக்கு ஏற்றி, விரதம் இருந்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற மந்திரங்களைச் சொல்லுங்கள். இதனால் செல்வம், வெற்றி கிடைக்கும்.
- ஏழைகளுக்கு உணவு, தண்ணீர், உடை, பணம் தானம் செய்யுங்கள். கல்வி அல்லது மருத்துவ உதவி செய்வது போன்ற நல்ல விஷயங்களுக்கு தானம் செய்யுங்கள். இதனால் புண்ணியம் கிடைக்கும். மன அமைதி கிடைக்கும்.
- கோவில்கள் அல்லது புனித ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யுங்கள். இது ஆன்மீக பாதையை வலுப்படுத்தும். நல்ல விஷயங்கள் நடக்கும்.
- பிரச்சனையில் இருந்தால் சிவபெருமானின் சிலை முன்பு மஹா மிருத்யுஞ்சய அல்லது காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள். இது பாதுகாப்பு, சக்தி, குணப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கும். கெட்ட சக்தியை விரட்டும்.
- அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 4 மணிக்கு சற்று முன்பு) எழுந்திருங்கள். அப்போது வீட்டை சுத்தம் செய்வது, ஊதுபத்தி கொளுத்துவது, தியானம் செய்வது போன்ற செயல்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை:
- கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது. அன்று நல்லெண்ணம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சண்டை போடக்கூடாது. கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அன்பான, மென்மையான வார்த்தைகளை பேசுங்கள்.
- தங்கம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது நல்லது தான். ஆனால், யோசித்து செலவு செய்யுங்கள். தேவையில்லாத கடனை வாங்காதீர்கள்.
- அசைவ உணவு, மது, காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
- மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள். இது நல்ல சக்தியை கொடுக்கும். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆன்மிக பலத்தை தரும்.
- இந்த புனித நாளில் பிரம்மச்சரியம் மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தவிர்க்கவும். இதனால் ஆன்மீக சக்தி அப்படியே இருக்கும்.
- மற்றவர்களை அவமதிக்கவோ, அவமரியாதை செய்யவோ கூடாது. அன்பாக, பணிவாக இருங்கள்.