1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்.. அரசு தேர்வுத்துறை அதிரடி ஆர்டர்..!

இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்.. அரசு தேர்வுத்துறை அதிரடி ஆர்டர்..!


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 படித்து விட்டு, தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டாம் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2வுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதில்லை. பிளஸ் 1 பொதுத் தேர்வையே எழுதாதவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வரை படித்து விட்டு தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 சேர்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களின் விவரங்களில் பிழை இருந்தால், எமிஸ் இணையதளத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதி விட்டு, இடையில் நின்று மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெயரை, நடப்பு கல்வியாண்டின் பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியலில் சேர்க்க இயலாது.

சிபிஎஸ்இ மற்றும் வேறு மாநில பாடத்திட்டத்தில் சேர்ந்து பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் பிளஸ் 2 படித்தால் அவர்களின் பெயரை பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில் சேர்க்கக்கூடாது” என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like