இந்த மக்கள் ரொம்ப பாவம்..! கொளுத்தும் வெயிலில் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 5 மாவட்டங்கள் இது தான்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c9bc5bfd137fd3beda40aed0fb7bf515.png?width=836&height=470&resizemode=4)
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (மார்ச் 5) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் கரூர் பரமத்தியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதேபோல் தமிழ்நாட்டில் வெயில் அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஈரோடு மாவட்டம் 39 டிகிரி செல்சியஸ் உடன் முதல் இடத்தினையும், நாமக்கல் மாவட்டத்தின் கரூர்-பரமத்தி 38.5 டிகிரி செல்சியஸ் உடன் இரண்டாவது இடத்தினையும் பிடித்துள்ளது.37.7 டிகிரி செல்சியஸ் உடன் சேலம் 3-வது இடத்தினையும், மதுரை 37.2 டிகிரி செல்சியஸ் 4-வது இடத்தினையும், தர்மபுரி 37 டிகிரி செல்சியஸ் உடன் 5-வது இடத்தினையும் பிடித்துள்ளது.