சென்னையில் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெறும் 2 இடங்கள் இது தான்..!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க நேற்று இரவு திடீரென ஆபரேஷன் சிந்தூர் நிகழ்த்தி இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி முழுவதுமாக அழித்துள்ளனர். இதை பாகிஸ்தான் தரப்பு சற்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் அறிவித்தபடி போர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
போர் அல்லது அவசர நிலையில் மக்கள் எப்படி தயாராக வேண்டும். பதற்றமான சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும். வான்வெளி தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால் அரசும், மக்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் போன்றவை ஒத்திகை செய்யப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை துறைமுகம், கல்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களை மத்திய அரசு தேர்வு செய்தது.இவற்றில் போர் ஒத்திகை நடத்தப்பட்டது. அவசர கால சைரன்கள் ஒலிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் இன்றைய தினம் இரண்டு இடங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகியவை ஆகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இன்று மாலை 4 மணிக்கு இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.