தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும்.. பகீர் கிளப்பும் மாடர்ன் பெண் சாமியார்..!

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர், காளி மாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசாரியா பட்டம் பெற்றவர். ஸ்ரீ பவித்ரா, திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார்.
முகத்தில் மேக்கப், உதட்டில் லிப்ஸ்டிக், தலைமுடிக்கு கலரிங், நிறைய தங்க நகைகள் அணிந்து சொகுசு காரில் வந்த அவர், திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார்.
அவர் கூறும்போது, “சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.
உலகில் அதர்மம் தலைதூக்கும் போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமுலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவர். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.
உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும். விரைவில் திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளேன்” என்று அவர் கூறினார்.