சம்பவம் இருக்கு..! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/56ffea05ce0b66f5035cd82d88d902fe.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் இதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் புயல் உருவாவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மன்னார் வளைகுடாவில் இருந்து வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி பெரும் வளிமண்டல சுழற்சி நகர்ந்து வருகிறது. இன்னும் 2 தினங்களில் பெரிய புயல் சின்னமாக இது உருவாகி, பின்னர் தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளில் இருந்து இது நகரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயல் சின்னம் உருவாகக்கூடும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே 21-ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது