இவர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

இவர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

இவர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
X

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடி வேலைவாய்ப்பு | Tamilnadu Anganwadi Recruitment | ICDS | அரசு  வேலை | latest news tamil
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘தமிழ்நாடு சட்டசபையில் அவை விதி எண் 110-ன் கீழ் 7.9.2021 அன்று, ‘சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்’ என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதை செயல்படுத்தும் விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், 40 ஆயிரத்து 601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it