1. Home
  2. தமிழ்நாடு

பார்க் வரும் பெண்களை குறிவைத்து சீரழித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ் !

பார்க் வரும் பெண்களை குறிவைத்து சீரழித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ் !


சென்னை அடுத்த மணலி காவல்நிலையத்தில் பெண் ஒருவர், தனது கைப்பை மற்றும் செல்போன் திருடு போய்விட்டதாக புகார் அளித்தார். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து அப்பெண்ணிடம் விசாரணையை தீவிரப்படுத்தியப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது, நான் கள்ளக்காதலருடன் மாதவரம் பூங்காவில் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே வந்த இளைஞர் ஒருவர் திடீரென எங்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்தார்.

பார்க் வரும் பெண்களை குறிவைத்து சீரழித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ் !

பின்னர் தான் போலீஸ் என்று கூறிக்கொண்டு அந்த போட்டோவை உங்கள் குடும்பத்தினரிடம் காட்டவா என மிரட்டியதாக கூறியுள்ளார். தன்னுடன் இருந்தவரை விரட்டிவிட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய கைப்பை மற்றும் அதில் இருந்த ரூ.15,000, செல்போன் ஆகியவற்றையும் பறித்து சென்றதாக கூறிய அப்பெண் வீட்டில் உள்ளவர்களை நம்பவைக்க அவற்றை காணவில்லை என புகார் கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது போலி போலீஸ் என்பது தெரியவந்தது. பின்னர் அந்நபரை பிடிக்க களத்தில் இறங்கினர்.

பார்க் வரும் பெண்களை குறிவைத்து சீரழித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ் !

அதன்படி அப்பெண் அளித்த தகவல் அடிப்படையில் மாதவரம் பகுதியில் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த அந்நபரை போலீசார் விசாரித்தனர். அவர் தண்டையார் பேட்டையை சேர்ந்த டிக்கிமணி(33) என்பது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுபோன்று 50 பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பார்க் வரும் பெண்களை குறிவைத்து சீரழித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ் !

செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் காதலர்கள், கள்ளக்காதலர்களை புகைப்படம் எடுத்து தான் போலீஸ் என்று கூறி மிரட்டி இக்கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in


Trending News

Latest News

You May Like