1. Home
  2. தமிழ்நாடு

ஜிலென்று மாற போகும் வானிலை... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Q

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இதேபோல் சென்னையிலும் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் திடீரென கிளைமேட் மாறியது. காலையில் இருந்து பிற்பகல் 3.30 மணி வரை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் திடீரென மாலை 3.45 மணியளவில் கிளைமேட் தலைகீழாக மாறியது. திடீர் காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டு சென்னை இருட்டாக மாறியது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் 30 - 40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த 3 மணி நேரத்தில் மழையின் காரணமாக ஒருசில இடங்களில் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கலாம். இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like