இணையத்தில் வைரலாகும் #StandwithArputhamAmmal
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணைய தளத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.
விசாரணைக்கு என்று கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. அவரை மீட்க அவரது தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். பேரறிவாளன் சிறைக்கு சென்று 30ஆவது ஆண்டு தொடங்குகிறது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதளத்தில் #StandwithArputhamAmmal என்ற போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
newstm.in