1. Home
  2. தமிழ்நாடு

ஆபத்தை உணராமல் செய்ததால் தாய், சேய் பலியான சோகம்..!

1

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் செந்தில் – வசந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளன நிலையில் 6வது முறையாக வசந்தி கர்ப்பம் தரித்துள்ளார். வறுமை காரணமாக வசந்தி வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது வசந்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் வசந்திக்கும் அதிகப்படியான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக வசந்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வசந்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் தாய்,சேய் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்நிலையில் கழுத்தில் துணி சுற்றப்பட்டு, வீட்டில் மூடப்பட்ட வாளியிலிருந்து இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ள நிலையில் கொலையா எனவும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தொடர்பாக வசந்தியின் கணவர் செந்திலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்தின் போது குழந்தை இறந்ததா அல்லது தாய், தந்தையே கொன்றார்களா என பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like