1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் சோகம்..!!விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசி ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

W

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று (டிச.15) காலை 08.00 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ணை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், தண்ணீரைப் பீய்ச்சியடித்தத் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர்.
மாவட்ட காவல்துறை அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறையான ஆவணங்களைப் பெற்று பட்டாசு ஆலை செயல்பட்டதா? பட்டாசு ஆலையின் உரிமையாளர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like