இன்று வெளியாகிறது ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல்..!
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் இருந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ் குமார், மோகன் லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் ஜெய்லர் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ஜுஜூபி எனும் பாடல் இன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.