1. Home
  2. தமிழ்நாடு

கடந்த 14-ம் தேதி டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ரத்து செய்யப்பட்டது..!

1

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.

சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று, மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.

மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வாணையத்தால் மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும், பின்னர் தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு
குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகி அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 51 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இப்பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டமாக நடைபெறும். இந்நிலையில், டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like