ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் குடும்பம் நடத்தி வந்த போலீஸ்காரர் மகன் கைது!

திருச்சியில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த போலீஸ்காரரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி் ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மகாலிங்கத்தின் மகன் கார்த்தி (26), தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதியை (21) காதலித்து கடந்தாண்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
திடீரென கணவர் நடத்தையில் சந்தேகப்பட்ட சுமதி அவரது செல்போனை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு ஏற்கனவே மூன்று பெண்களுடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திக்கிடம் சுமதி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சுமதி கார்த்திக் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் லால்குடி மகளிர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
newstm.in