1. Home
  2. தமிழ்நாடு

எதிரிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது! அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசப் பேட்டி!

எதிரிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது! அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசப் பேட்டி!


அதிமுக கட்சி பிளவு படுமோ என்கிற அளவிற்கு எடப்பாடி, ஓபிஎஸ் பிரச்சனை நீண்டு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் இன்று (அக்டோபர் 7)ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு வரையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நீடித்தது. இந்நிலையில், இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார். அதன் பின்னர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என அனைவரும் மெரினாவில் அமைந்திருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது, " இன்று பொன்னான நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரின் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுகவிற்குள் பிரச்சினைகள் வராதா என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம்’’ என்றார்.

Trending News

Latest News

You May Like