1. Home
  2. தமிழ்நாடு

பேருந்துகளில் திருக்குறளுடன் சேர்ந்து இடம் பெற்றுள்ள ”மக்களால் நான் மக்களுக்காகவே நான்” வாசகம்!! தேர்தல் பரப்புரை வாடை!

பேருந்துகளில் திருக்குறளுடன் சேர்ந்து இடம் பெற்றுள்ள ”மக்களால் நான் மக்களுக்காகவே நான்” வாசகம்!! தேர்தல் பரப்புரை வாடை!


தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இதனிடையே தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது பணியை தொடக்கி விட்டது. வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு அந்த மாதத்திற்குள்ளேயே பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது

மக்களை கவர புதுபுது திட்டங்களையும், அறிவிப்புகளையும் அதிமுக அரசு வெளியிட்டு கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் திமுக தலைவர் தங்கள் கட்சிப்பணிகளை முடுக்கியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக ஒரு வித்தியாசமான தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. திருக்குறள் மட்டுமே இடம்பெற்றுவந்த சென்னை மாநகர புதிய பேருந்துகளில் திருக்குறளுடன், "மக்களால் நான் மக்களுக்காகவே நான்புரட்சித்தலைவி அம்மா" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லியே வாக்கி வாங்கிவிடலாம் என திட்டமிட்டுள்ளனர் போலும்!

Trending News

Latest News

You May Like