வந்தாச்சு ‘ரோபோட்டிக் காப்'..! இனி பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு..!

து மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் , பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக 'ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" அறிமுகம்.
'ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" பாதுகாப்பு சாதனத்தில் 24 மணி நேரமும் 360° பல மீட்டர் தூர துல்லிய கண்காணிப்பு பதிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நேரடி காணொளி காட்சி பதிவு , குரல் தொடர்பு பதிவுகள் , காவல் துறையும் ஆபத்தில் உள்ள பொதுமக்கள் உரையாடும் வசதி , அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி, உயர் தர நவீன வீடியோ கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி, ஜி.பி.எஸ் வசதி , மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு அழைப்பிற்கு உதவிடும் விரைவான நடவடிக்கைகள், உயிர் காக்கும் செயல்பாடுகளுடன் தகுந்த திறன் பயிற்சியுடன் கூடிய காவல் துறையினர் மூலம் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சாதனத்தில் உள்ள ஒரு சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகில் உள்ளவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சப்தம் ஏற்படுத்தி உதவிடவும் , ஆபத்தில் உள்ளவர்க்கு வீடியோ கால் வசதி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவிக் கோரவும் , ரோந்து காவல் வாகனங்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் நிகழ்வுகளை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்தடைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை கொண்டு புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுத்திடவும் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
'ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப் சாதனத்தில் 24 x 7 இண்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டு புதிய தொழில் நுட்பம் மற்றும் அப்டேட் வசதிகள் மூலம் பொது மக்களின் பிரச்சனைகளை உரிய நேரத்தில் கண்டறிந்து , உடனடி நடவடிக்கை எடுத்திட பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் , மேலும் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் குற்றம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாக திகழும் , இச்சாதனம் பெரிதும் காவல் துறையோடு இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நண்பனாக திகழ இருக்கிறது.
இந்த பாதுகாப்பு சாதனம் மூலம் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தங்களது சமூக பொறுப்புடன் அவசர காலங்களில் விரைவான நடவடிக்கை எடுத்து உயிர் காக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், “சென்னை பெருநகரில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , சென்னை பெருநகர காவல் துறையினரால் ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:
* 24X7 நேரடி கண்காணிப்பு
* 360° வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்
* எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான்
* எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு
* ஜிபிஎஸ் மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு
* உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன்
* பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பு
ஆபத்தில் உள்ள நபர் அல்லது அருகிலுள்ளவர் இந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால்:
* காவல்துறைக்கு உடனடி அழைப்பு
* அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி
* வீடியோ கால் மூலம் நேரடி காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு
* ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் வருகை
* கேமரா பதிவு மூலம் புலனாய்வு மற்றும் நடவடிக்கை
சென்னையின் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள். வணிக வளாகங்கள். வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் இடங்களில் இது நிறுவப்பட உள்ளது. பூங்காக்கள் உள்ளிட்ட இந்த சாதனம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் உயிர் காக்கும் நம்பிக்கையான பாதுகாப்பு தோழராக செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 ROBOTIC COPS to Hit Chennai Streets—A New Era of Law Enforcement Begins! (1/6) pic.twitter.com/NgwKAwRcrx
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) April 28, 2025