1. Home
  2. தமிழ்நாடு

மக்களை குளிர்விக்க வருகிறது மழை..! 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!

1

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மாலை வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் 30 - 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேபோல் தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் கரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. இதில் நெல்லை மாவட்டம் சேர்வலாறில் ஒரே நாளில் 8 செமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like