1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் வியப்பு..! வேலூரில் மரத்தில் இருந்து கொட்டும் நீர்..!

1

இந்த உலகில் ஏராளமான மர்மங்கள் மனிதனை வியக்க வைக்கிறது. இயற்கை ஒவ்வொரு இடத்திலும் அதிசயங்களை மறைத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் வேலூரில் ஒரு விசித்திரமான மரத்தின் வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இந்த பழமையான மரத்தில் இருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வேலூரில் மரம் ஒன்றில் இருந்து பல மணி நேரமாக தண்ணீர் வெளியேறி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர், மரத்தில் இருந்து வேகமாக நீர் வெளியேறுவதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அங்கு வந்துள்ள நிலையில் தண்ணீர் வருவதற்கான காரணம் குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள்

Trending News

Latest News

You May Like