1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் அதிர்ச்சி..! ரவுடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போலீஸ்!

1

சென்னை கேகே நகர் பத்தாவது செக்டார் ,63வது தெருவை சேர்ந்தவர் அபிஷேக்(21).சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி,  அடிதடி, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளியாக வலம் வரும் பிரபல ரவுடி அபிஷேக்கை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி கே .கே நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலத்தின் போது ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி அபிஷேக் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன்  குத்தாட்டம் ஆடி பொதுமக்களை மிரட்டியுள்ளார்.

மேலும், சரித்திர பதிவு குற்றவாளியான அபிஷேக்கை போலீஸ் தேடிவரும் அதே வேளையில், கேகே நகர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் நாராயணன் என்பவர் அதே சாமி ஊர்வலம் போது செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளி அபிஷேக் பட்டாக்கத்தியுடன் சாமி ஊர்வலத்தில் போதையில் குத்தாட்டம் ஆடும் வீடியோவும் காவலர் நாராயணனுடன் இருக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில் கைது செய்ய வேண்டிய காவலரே குற்றவாளியுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரபல குற்றவாளியான அபிஷேக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் செல்பி எடுத்த கே.கே நகர் காவல் நிலைய காவலர் நாராயணன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like