1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் அதிர்ச்சி..! இன்று கன்னியாகுமரி சுற்றுலா தலங்களை மூட ஆட்சியர் உத்தரவு..!

1

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கள்ளக் கடல் நிகழ்வு எச்சரிக்கை காரணமாக குமரி கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. லெமூர் கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூடப்படும். கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டும். இவ்வாறு மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like