1. Home
  2. தமிழ்நாடு

எடப்பாடி வழியில் அமெரிக்காவில் ஜோ பைடன் கொடுத்த பலே வாக்குறுதி!

எடப்பாடி வழியில் அமெரிக்காவில் ஜோ பைடன் கொடுத்த பலே வாக்குறுதி!


அமெரிக்க அதிபர் தேர்தலில், "நான் வெற்றி பெற்றால் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்" என ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நோக்கி அகில உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான இறுதி விவாதம் நேற்று களை கட்டியது.

இந்த நிலையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நான் அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றார். மேலும், கொரோனா பெருந்தொற்றை நாட்டை விட்டே விரட்டுவேன் என்றும் சபதமிட்டார்.

குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்ப்பும் இதே வாக்குறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக. உலகமே பயந்து நடுங்கும் அமெரிக்காவே இருந்தாலும், நம்மூர் அரசியலுக்கு ஈடாகுமா என்பது இதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆக, எடப்பாடி வழியிலேயே, ட்ரம்ப்பும், ஜோ பைடனும் செல்கிறார்கள். ஆக, சபாஷ் எடப்பாடியாரே....! சும்மா... கிழி... கிழி.. !

Trending News

Latest News

You May Like