1. Home
  2. தமிழ்நாடு

சின்ன வழக்கில் சிக்கிய கைதி விசாரணை மேற்கொண்டதில் மெகா வழக்கிலும் மாட்டிக் கொண்டான்!!

சின்ன வழக்கில் சிக்கிய கைதி விசாரணை மேற்கொண்டதில் மெகா வழக்கிலும் மாட்டிக் கொண்டான்!!


கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்தார். கடந்த மாதம் பாலாஜி மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் ஊக்க மருந்து பயன்படுத்திய வழக்கில் தக்கலை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்இதையடுத்து பாலாஜியை வங்கி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தனர்

அவர்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வங்கி நிர்வாகம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மறுதணிக்கை செய்தனர். அப்போது 34 வாடிக்கையாளர்கள் பெயரில் பாலாஜியே போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து  வங்கி மேலாளர் கருங்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like