மூன்று நாள் பயணமாக கோவா செல்கிறார் குடியரசு தலைவர்..!

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2023 ஆகஸ்ட் 22 முதல் 24 வரை கோவாவில் பயணம் மேற்கொள்கிறார்
ஆகஸ்ட் 22 அன்று கோவாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் கோவா அரசு ஏற்பாடு செய்துள்ள குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு 'ஆவணங்கள்' வழங்குகிறார்.
ஆகஸ்ட் 23 அன்று, கோவா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். கோவாவின் ஆளுநர் மாளிகையில் கோவா பழங்குடி குழுக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார்.