வனிதாவின் 3ஆவது திருமணத்தால் நடந்த ஒரே நல்ல விஷயம்! என்ன தெரியுமா?
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா ஜூலை 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருணம் செய்து கொண்டார்.
இவரது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் பீட்டர் பாலின் மனைவி, விவாகரத்து பெறாமல் தன் கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இவர்கள் திருமண விவகாரம் தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, தயாரிப்பார் ரவீந்திரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு வனிதா பதிலடி கொடுத்தார்.
இப்படி பல பிரச்னைகளுக்கு நடுவே வனிதாவுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால் அவர் நடத்திவரும் யுடியூப் சேனலை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் ஆதரது தனக்கு இருப்பது தெரிய வருவதாக வனிதா கூறியுள்ளார்.
newstm.in