மக்களுக்கு அடுத்த ஷாக் ..! டாஸ்மாக் மதுபான விலை விரைவில் உயர்கிறது..?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b9c0682b9dc72ab2ce8f2d9e0984ab3c.jpg?width=836&height=470&resizemode=4)
மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மதுபாங்கங்களின் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, சாதாரண மதுவகையின் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய், உயர்தர மதுவகையின் குவார்ட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது.
பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறாரகள்.
இதுபற்றி டாஸ்மாக் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் கூறும் போது, மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். தமிழகு அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டு வருகிறது. எனவே மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு தான் முடிவு செய்யும் என்று கூறினார்கள்.