1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! இன்று முதல் எம்.சாண்ட் ஜல்லி யூனிட்டுக்கு ரூ.1,000 உயர்வு..!

1

கனிமவள வரி விதிப்பை குறைக்க கோரி கல்குவாரி, கிரஷர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களை அமைச்சர் துரைமுருகன் நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளதாக சங்கத்தினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கல்குவாரி, கிரஷர் சங்கத்தின் தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 4ம் தேதி வரி விதித்துள்ளனர். வரி அதிகமானதால் தொழில் செய்வது சிரமமாக இருந்தது. அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வேலை நிறுத்தம் செய்தோம். அப்போது அரசிடம் கேட்டபோது எதற்காக வரி விதிக்கப்பட்டது என்ற நியாயமான காரணங்களை அமைச்சர், அதிகாரிகள் கூறினர். அதை உடனடியாக குறைக்க முடியாது, அதற்கு சில காலஅவகாசம் தேவைப்படும் என்றனர். 

ஆகையால், இன்று முதல் எம்.சாண்ட, பி.சாண்ட், ஜல்லி போன்ற பொருட்கள் விலை உயர்த்தப்படும். எனவே விலை உயர்வை பொறுத்துக் கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு யூனிட்டுக்கு ஒவ்வொரு பொருட்களுக்கும் ரூ.1,000 உயர்த்தப்படும். அதன்படி ஜல்லி ரூ.4,000க்கு விற்பனை செய்தது ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் ரூ.6,000, பி.சாண்ட் ரூ.7,000 என ஒவ்வொரு பொருட்களுக்கும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

Trending News

Latest News

You May Like